Tuesday, 16 July 2013

தலைப்பில் என் பெயரும் வேண்டாம், பில்டப்பும் வேண்டாம்: அஜீத் அதிரடி உத்தரவு

சென்னை: அஜீத் குமார் தனது படத் தலைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று இயக்குனர்களுக்கு தெரிவித்துள்ளார். 

அஜீத் குமார் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படத்திற்கு வலை என்று பெயர் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. 


ஆனால் அதை சம்பந்தப்பட்டவர்கள் மறுத்தனர். இந்நிலையில் அஜீத் படத்திற்கு புதிய தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பறவை 


அஜீத் படத்தின் தலைப்பு வலை இல்லை பறவை என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த தலைப்பையும் யாரும் இதுவரை உறுதி செய்யவில்லை.

சீக்கிரமாக தலைப்பை சொல்லுங்க 

விஷ்ணுவர்தன் படத்தின் தலைப்பில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று தெரியவில்லை. தலைப்பை அறிவிப்பேனா என்று அடம்பிடிக்கிறார்களே.

பில்டப் வேண்டாம் 

தனது கதாபாத்திரத்தின் பெயரையோ அல்லது பில்டப் கொடுக்கும் தலைப்பையோ தனது படத்தின் தலைப்பாக வைக்கவே கூடாது என்று அஜீத் குமார் இயக்குனர்களுக்கு உத்தரவு போட்டுள்ளாராம்.

No comments:

Post a Comment